மதுரை போக்குவரத்து காவலரின் மனிதாபிமானத்தால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட அபலைப் பெண்ணின் வாழ்கை காப்பாற்றப்பட்டது
மதுரை, திடீர் நகர் போக்குவரத்து காவல் நிலைய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. சின்னக்கருத்தப்பாண்டி அவர்கள், மதுரை பெரியார் நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை அருகே மனநிலை சரியில்லாத இளம் பெண் முழுநிர்வாணமாக படுத்திருந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கே அருகில் பூ வியாபாரம் செய்யும் பெண்கள் மூலமாக அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்து அதன் பிறகு மதுரை திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கு காவல் ஆய்வாளர் திருமதி.கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி நிலைய தலைமை காவலர் திருமதி, ஜெயதேவி அவர்கள் அந்த மனநிலை பாதித்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி மதுரை திருவாதவூரில் உள்ள நியூ கிரியேசன்ஸ் டிரஸ்ட் என்ற ஒரு காப்பகத்தில் அந்த பெண்ணை ஒப்படைத்தனர், அப்போதுதான் தெரிந்தது அந்த பெண் அங்குதான் ஏற்கனவே இருந்து சிகிச்சை பெற்று வந்தார் என்று. அந்த பெண்ணின் பெயர் இந்திரா என்றும் அவர் மனநிலை பாதிப்பினால் ரோட்டோரம் சுற்றித்திரிந்தவர் என்றும் தெரிய வந்தது. எப்படியோ காவல்துறையினரின் உதவியினால் ஒரு அப்பாவி பெண்ணில் வாழ்வு காப்பாற்றப்பட்டது.