Police Department News

மதுரையில் இதுவரை 2,42,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு

மதுரையில் இதுவரை 2,42,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்கள் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இது வரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 504 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், இன்று ஒரே நாளில் மட்டும் 3087 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் இதுவரை சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்து 591 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.