தென் மண்டல காவல்துறை தலைவராக அன்பு I.P.S. அவர்கள் இன்று மதுரையில் ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார்
தென் மண்டல காவல்துறை தலைவராக திரு. அன்பு IPS அவர்கள் இன்று மதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக தென் மண்டல காவல்துறை தலைவராக இருந்த முருகன் I.P.S. அவர்கள், தேர்தலுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி. அன்பு அவர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டார், பொது மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அத்தியாவசிய பொருட்களை வாங்க நெருக்கமான சந்தை பகுதிகளுக்கு வருவதை தவிர்த்து தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளுவதை வழக்கமாக கொள்ள வேண்டும் என அறிவுறித்தியுள்ளார் ஐ.ஜி. அன்பு I.P.S. அவர்கள். காவல்துறையினர் மக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள அறிவுறித்தியுள்ளதாகவும் கூறினார்