பொதுமக்களுக்கு, காவல்துறையினரால் ஏதேனும் அசவுரியம் ஏற்பட்டால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைக்கலாம்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க காவல்துறை, வருவாய்துறை, அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் இக்குழு அபராதம் விதிப்பதோடு கடையை மூடி சீல் வைக்கும் தவிர சும்மா வலம் வந்தவர்கள் மீது 204 வழக்குகள் பதிவு செய்து, 202 டூ வீலர்கள் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் கூறுகையில், காவல்துறையினரால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசவுரியங்கள் ஏற்பட்டால் 0452−2566387, என்ற எண்ணிற்கு அழைக்கலாம். வாட்ஸ்அப்பிலும்(7708806111) தகவல் தெரிவிக்கலாம் என்றார்.