Police Department News

மதுரை கலெக்டராக இருந்த அன்பழகன் மாற்றப்பட்டு, முன்னால் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனருமான அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டார்.

மதுரை கலெக்டராக அனீஸ் சேகர் நியமனம்

மதுரை கலெக்டராக இருந்த அன்பழகன் மாற்றப்பட்டு, முன்னால் மாநகராட்சி கமிஷனரும், தற்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனருமான அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டார்.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் மாற்றப்படுவதுண்டு, அதன்படி இந்த மாற்றம் நடந்துள்ளது. மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள அனீஸ் குமார் அவர்கள் எம்.பி.பி.எஸ்., டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் 2011 ஐ.ஏ.எஸ் பேட்ஜ், மதுரை மாநகராட்சி கமிஷனராக 2018 முதல் 2019 வரை இருந்தார். இவர் பணியின் போது டெங்கு காய்ச்சல் உச்சத்திலிருந்தது. காய்ச்சலை கட்டுப்படுத்தி உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்த்தார்.

மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையங்களில் சக்கரை நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார். துப்பரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.