Police Recruitment

தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கிய சந்திப்புகளான விவிடி சிக்னல், மற்றும் குரூஸ்பானாந்து சிலை சந்திப்புகளில் வாகன சோதனையிவ் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக வழங்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் வழங்கப்பட்ட காலால் மிதித்து இயக்கக் கூடிய கிரிமி நாசினி தெளிப்பான் மற்றும் வெப்ப பரிசோதனை கருவி ஆகிவற்றை பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் திரு. ஜுடு, செயலாளர் திரு. மகாலிங்கம், திரு. முத்துராமன், ஜெயா இன்ஜினியரிங் திரு.எலையன்ஸ் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கனேஷ் , தென்பாக காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த ராஜன், வடபாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர். திரு.ராமகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் உட்பட காவல்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.