Police Department News

மதுரை, மேலூர் அருகே, சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, ஒருவர் தப்பியோட்டம், மேலூர் போலீசார் வலை வீச்சு.

மதுரை, மேலூர் அருகே, சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, ஒருவர் தப்பியோட்டம், மேலூர் போலீசார் வலை வீச்சு.

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அரிட்டாபட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கே அனுமதி இல்லாமல் இரண்டு நபர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதை கண்டு அவர்களை நோக்கி காவலர்கள் விரைந்தனர் உடனே அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர் அவர்களை காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்த போது ஒருவன் தப்பியோடி விட்டான், மற்றொருவன் பிடிபட்டான். பிடிபட்டவனை கைது செய்து விசாரித்த போது அவன் அரிட்டாபட்டியை சேர்ந்த வீரணன் மகன் ராமசாமி வயது 43/21, என தெரிய வந்தது. அவனிடமிருந்து 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

தலைமறைவான மற்றொருவன்,அரிட்டாபட்டியை சேர்ந்த பொன்னாச்சி மகன்
போஸ் வயது-55/21, என்பவரை தேடி வருகிறார்கள், பிடிபட்ட ராமசாமியை கைது செய்து சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.