Police Department News

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரிகள்..!

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரிகள்..!

சென்னை மாவட்டம்
25/5/2021 செவ்வாய்கிழமை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவதிப்பட்டு, உதவியின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக சென்று,

அத்தியாவசியமின்றி ஊர்சுற்றி வரும் இரு சக்கர வாகனம், மற்றும் ஆட்டோ உள்ளிட்ட கார் ஓட்டுனர்களிடம்,
தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் வெளியில் வரவேண்டும் மற்றபடி எங்களை அணுகலாம் என தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி இ.கா.ப.,
ஐ.ஜி. லோகநாதன் இ. கா. ப.
ஆகியோர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவல் துறை கண்காணிப்பாளர் ஜனகன் மற்றும் துணை கண்காணிப்பாளர் அசோகன். ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு அளித்தனர்,

மேலும் திருவல்லிக்கேணி பகுதி, சேப்பாக்கம் பகுதி மற்றும் அண்ணா சாலை போன்ற இடங்களில்
கொடிய கொரோனா நோய் தொற்றின் பாதிப்பை குறித்து பொதுமக்களிடம் தனித்திரு, விழித்திரு, என விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.

24 மணி நேரமும் ஆம்புலன்ஸ், உணவு மற்றும் பல்வேறு உதவி பணிகள் செய்ய நாங்க தயார் நிலையில் இருக்கின்றோம் எனவும் ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைத்தனர்.

காவலர்களின் இச்செயல் அப்பகுதி முழவதும் உள்ள மக்களை விழிப்புணர்வடைய செய்ததை நாமே வியந்து பாராட்டுகிறோம்..!

Leave a Reply

Your email address will not be published.