Police Department News

தூத்துக்குடி மாவட்டம செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம
செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது -ரூபாய் 11,700/- பணம் பறிமுதல்.

செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று (30.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது செய்துங்கநல்லூர் அராபத் தோட்டம் அருகே செய்துங்கநல்லூர் ஜெம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அலமேலு மகன் சுப்பிரமணியன் வயது,45 ஆழ்வார்திருநகரி கேம்பலாபாத் பகுதியைச் சேர்ந்த ஹமீது மகன் முசாம்பின் வயது40, செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முகமது கனி மகன் சேக் மீரான் வயது,36, முகமது நூர்தீன் மகன் ஹமீது சுல்தான் வயது 56, முகமது உசேன் மகன் பிலாஸ் கான் வயது32, காதர் மகன் முகம்மது வாஹப் வயது 38, காஜா முகைதீன் மகன் அப்துல் ராஃப் வயது 63, மற்றும் செய்யது கனி மகன் முகம்மது அசிம் வயது, 41, ஆகிய 8 பேர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் வழக்கு பதிவு செய்து எதிரிகள் 8 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுகளும் ரூபாய் 11,700/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.