10..06.2021 சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு சென்னை பெருநகர அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர்.திரு.D.JOSEPH மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது.
10 .06.2031 இன்று
சென்னை பெருநகர அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு.D.JOSEPH சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு President.V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch TN.)மூலமாக ஆதரவற்றோருக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் முககவசம் கிருமிநாசினி மற்றும்
முழு ஊரடங்கு நேரத்தில் பசியோடு தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் ஆதரவற்று படுத்துக்கிடக்கும் பெரியவர்கள் முதியவர்கள் சிறியவர்கள் நரிக்குறவர் மாற்றுத்திறனாளிகள் தூய்மைப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகிய 100பேருக்கு மேல் பசியோடு தவிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அடையாறு பகுதியிலுள்ள உள்ள ஆதரவற்று சாலையில் வசிக்கும் சிறியோர் பெரியோர் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு தினம் தோறும் 100 பேருக்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கும் மருத்துவ பொருட்கள் போன்றவை வழங்கி வருகிறார்கள்.இப்படிபட்ட நன்மையான செயல்களை மற்றவர்களும் செய்யவேண்டும் என்ற நல்நோக்கில் காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.