திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர்
திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வகுப்பு எடுத்து காவல்துறையினர் அசத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீராமபுரத்தில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கனேசன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் வந்து வாகனத்தில் ஊர் சுற்றித்திரிபவர்களை, வெளியில் வராமல் இருக்கவும் இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வெளியில் ஊர் சுற்ற வேண்டாம் எனவும், முகக் கவசம் கண்டிப்பாக அணியும்படியும் அறிவுறுத்தினர். மேலும் கொரோனா நோயை தடுக்க சமூக இடைவெளியே கடைபிக்கவும், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிரிமிநாசனி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக பொது மக்கள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கினர். உடன் ஶ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா மற்றும் சையது ஆதம் சேட் ஆகியோர் இருந்தனர்.