திண்டுக்கல்லில் இருந்து பணியிட மாறுதலில் செல்லும் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
திண்டுக்கல்லில் இருந்து பணியிட மாறுதல் பெற்று செல்லும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார்.
திண்டுக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள் தென்காசி டி.எஸ்.பி., யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தென்காசியிலிருந்து கோகுலகிருஷ்ணன் அவர்கள் திண்டுக்கல் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் சிறப்பாக பணி புரிந்து வந்த திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களுக்கு இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.