Police Department News

ஊக்கத் தொகை ரூபாய் 5000/− எப்போது. எதிர்பார்பில் போலீசார்

ஊக்கத் தொகை ரூபாய் 5000/− எப்போது.
எதிர்பார்பில் போலீசார்

கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களான போலீசாருக்கு தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை எதிர்பார்த்து போலீசார் காத்திருக்கின்றனர்.

கொரோனா பரவலில் முழு ஊரடங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தலா ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதே போல முன்களப்பணியாளர்களான டாக்டர்களுக்கு ஏப்ரல், மே. ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். டாக்டர்களுக்கு மாதம் 30,000, நர்ஸ்களுக்கு மாதம் ரூ 20,000, டெக்னிசியன், மருந்தாளுனர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் மாதம் 15,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதுவரை போலீசாருக்கான ரூ.5000 ஊக்கத்தொகை, டாக்டர்கள், நர்ஸ்கள் மருத்துவ பணியாளர்கள் சிறப்புத்தொகை வழங்கப்படவில்லை , ஊக்கத்தொகை எப்போது கிடைக்கும் என எதிர்பார்பில் போலீசார் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.