Police Recruitment

விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார்

விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.

அப்போது மாவட்ட எஸ்.பி. பேசுகையில், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார். நிவாரண நிகழ்சி ஏற்பாடுகளை விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மாசார்பட்டி காவல் ஆய்வாளர் கோகிலா, எஸ்.ஐ. மணிமாறன் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பட்டிதேவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ், செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, ராமச்சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.