Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை, திருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை, திருநகர் W1, காவல்நிலையம், எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக, மது கடைகள் அடைத்த பிறகு அதிக விலைக்கு தனி நபர்களால் மது விற்பனை நடைபெறுவதாக ஆய்வாளர். திருமதி. அனுஷாமனோகரி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் நேற்றைய முன் தினம் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, தனக்கன்குளம், கண்மாய் அருகே ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தார், சுதாரித்து கொண்ட காவல்ர்கள் அவரை மடக்கிப் பிடித்து விசாரத்த போது அவர் தேவி நகர் 3 வது தெருவை சேர்ந்த வீரணன் மகன் தியாகராஜன் வயது 33/21, என தெரிய வந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடம் 7 மது பாட்டில்கள் இருந்தன், அவைகளை பறிமுதல் செய்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர், நீதி மன்றத்தின் உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.