Police Department News

முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு

முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க
உயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

🚨🔥முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

🚨🔥அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு
முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்கும் விதமாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டின்பேரில்
முத்துப்பேட்டையின் முக்கிய பகுதியான
1)ஆஸாத்நகர்,
2)புதிய பேருந்துநிலையம் ஆகிய இடங்களில்
முத்துப்பேட்டை
காவல்துறை சார்பில்
உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

🚨🔥மேற்படி உயர் கோபுரங்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
இன்று(27.07.21) காலை
திறந்துவைத்து கண்காணிப்பு பாதுகாப்புபணியை
துவங்கிவைத்தார்கள்.

🚨🔥இந்நிகழ்ச்சியில்
முத்துப்பேட்டை வர்த்தக சங்க நிர்வாகிகள்
இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

🚨🔥மேலும் மேற்படி கோபுர பாதுகாப்பு பணி
24×7 முறையில் இயங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

🚨🔥மேலும் முத்துப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் CCTV காமிரா அமைக்க
பணிகள் விரைந்து நடைபெறுவதாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
திருவாரூர் மாவட்ட காவல்துறை

Leave a Reply

Your email address will not be published.