Police Department News

ஶ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம்

ஶ்ரீவில்லிபுத்தூரில்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மனோகர் IPS அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் ஶ்ரீவில்லிபுத்தூர் காவல் துனைகண்காணிப்பாளர் திரு நமசிவாயம் தீவிர முனைப்புடன் நகர் காவல்துறை அதிகாரிளுக்கு உத்தரவிட்டார் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட நகர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதுசமயம் நகர் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நகர் துனை காவல் கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் மற்றும் நகர் ஆய்வாளர்செல்வி கீதா தனி படை அமைத்து திருப்பாற்கடல் அருகில் VRN நகரில் சோதனை நடத்தினர் மதியம் சுமார் 2:30மணியளவில் இந்த சோதனையானது நடைபெற்றது.

அப்போது குடோனின் கீழ் தளத்தில் ரகசியமாக பதுக்கி வைக்கபட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூடைகள்
2250 கிலோ கிராம்
2.250 டன் மற்றும்
ரொக்க பணம் 7,48,,000 பறிமுதல் செய்தனர்

இந்த குடோனின் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்த
நவநீதன்(36)
த/பெ சமுத்திரகணி
(பிள்ளையார் கோவில் தெரு
இந்திராநகர்)
என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்த நவநீதன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மனோகர் அவர்கள் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் அவர்களையும் செல்வி கீதா அவர்களையும் வெகுவாக பாராட்டினார் பின்னர் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.