National Police News Police Department News

ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபரிடம் 50 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கோவிந்தராஜூ,உதவி ஆய்வாளர் திரு.பரந்தாமன் மற்றும் முதல்நிலை காவலர் 839 திரு.பாபு, காவலர்கள் 201,475,477 ஆகியோர் சகிதம் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 31.07.2021-ம் தேதி காலை 07.00 மணியளவில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது ஐதராபாத்-தாம்பரம் Spl Train No.02670 வண்டியில் S-3 Coach ,Seat No.71-ல் பயணித்துவந்த Maddela Umesh-வயது/ 28
S/o Maddela Narsaiah
Kukkadam Telangana
என்பவர் ஓடூம் ரயிலில் இருந்து கொருக்குப்பேட்டை ரயில்நிலைய நடைமேடையில் குதித்தவரை சந்தேகத்தின் பேரில் கூப்பிட்டு விசாரிக்க தனது பெயர் விலாசங்களை மாறி மாறி கூறி இறுதியில் உண்மையான விலாசம் கூறினார் மேற்படி நபர் வைத்திருந்த பேக்கை சோதணைசெய்தபோது எந்த விதமான கணக்கும் இல்லாமல் ரூபாய் ஐம்பது லட்சம் (50,00000)வைத்திருந்தது தெரியவந்தது , இதுசம்மந்தமாக ரயில்வே காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உயர்அதிகாரிகள் அவர்கள் அறிவுரைப்படி சென்னை வருமானவரித்துறை புலணாய்வு பிரிவில் நல்ல முறையில் ரூபாய் ஐம்பது லட்சம்(50,00000) ஒப்படைக்கப்பட்டது என்பதை தெரிவிக்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published.