Police Department News

J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு.மீனாட்சி சுந்தரம் சட்டம் ஒழுங்கு மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு.மீனாட்சி சுந்தரம் சட்டம் ஒழுங்கு மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

08 .08 .2021 இன்று
J2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு . மீனாட்சி சுந்தரம் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் காவல்துறை சார்பாக சிறப்பு விருந்தினராகவும் மற்றும் அவர்களுடைய அறிவுறுத்தலின்படியும் சென்னை பெருநகர மாநகராட்சி ஒத்துழைப்புடனும் மற்றும் திருமதி .லலிதா வெங்கடகிருஷ்ணன் Giridhar Rehabilitation and care Endownment கலந்து கொண்டு திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN ) அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் 21வது தெருவில் இருக்கும் பூங்காவை தத்தெடுத்து பூங்காவில் உள்ளே இருக்கின்ற இடத்தை சுத்தம் செய்கின்ற பணியையும் மரக்கன்றுகள் நட்டு தினம் தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியையும் இன்றுமுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணியின் மூலமாக தேவையற்ற நபர்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்த இந்த பூங்காவை மீட்டு மீண்டும் சிறுவர்கள் விளையாடும் பூங்காவாகும் பெரியோர்கள் மற்றும் முதியோர்கள் நடைபயிற்சிக்கு பயன்படும்படியாகவும் தேவையற்ற நபர்கள் செயல்படாதபடி தினம் தோறும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் செயல்படும்படி சீர்செய்கின்ற பணியையும்
அதுமட்டுமன்றி J2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு . மீனாட்சி சுந்தரம் மற்றும் J5 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் தலைமையில் திரு.கோபி
(Rotary Community Corps Blue Waves Ch TN )3232 அவர்கள்
பெசன்ட் நகர் 16 வது தெருவில் இன்று மரக்கன்றுகளை நட்டனர் இதனை தொடர்ந்து பெசண்ட் நகர் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருகளுக்கும் மரக்கன்றுகள் தினம் தோறும் நட தீர்மானித்து உள்ளனர்.
மரக்கன்றுகள் வளரும் போது இயற்கை சுவாசமும் அதிகரிக்கும் என்ற விழிப்புணர்வை அப்பகுதி மக்களுக்கு காவல்துறை சார்பாக ஏற்படுத்தினார்கள்.
இப்படி பொதுமக்கள் பயன்படும்படியான நன்மையான செயல்களை தொடங்கியதற்கு அடையாறு மற்றும் சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சமூக தொண்டர்களாகிய Rotary Community Corps Blue Waves Ch TN குழுவினர்களையும் காவல்துறை உயர்திகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.