Police Department News

தூத்துக்குடி ஒருவர் கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடி ஒருவர் கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் (38) என்பவரை நேற்று (6.8.21) இரவு தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி முன்பு மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், முதல்நிலை காவலர்கள் பென்சிங், சாமுவேல், மாணிக்காராஜ், செந்தில்குமார், திருமணி மற்றும் காவலர் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தேடுதல் வேட்டையில், தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்கதுரை மகன் தங்க கார்த்திக் (25), பெருமாள்புரத்தை சேர்ந்த சௌந்திர பாண்டியன் மகன் அருண்குமார் (22), சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அந்தோணி முத்து (21) மற்றும் தாமோதர நகர் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் மகன் மாரிமுத்து (21). ஆகிய 4 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக நடராஜனை கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரைள மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.