Police Department News

போக்சோ வழக்கு எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போக்சோ வழக்கு எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் எதிரியான திருநெல்வேலி வட்டம், சீவலப்பேரி, மேட்டுக்குப்பகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சுரேஷ்(36) என்பவர் போக்சோ வழக்கில் எதிரி ஆவார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரசிதா அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 10.08.2021 இன்று எதிரி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.