Police Department News

மதுரை மாவட்டம் நிலையூரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் நிலையூரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டத்தில், காவல் நிலையங்களில் அதிக கிராமங்களை உள்ளடக்கிய காவல் நிலைய எல்லையில் அமையப்பெற்ற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் எளிதாக காவல் துறையை அனுகிடவும் குற்றங்கள் அதிகம் நடக்கும் கிராமப் பகுதிகளை கண்டறிந்து குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மதுரை மாவட்டம் ஆஸ்ட்டின்பட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள நிலையூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இப்புறக்காவல் நிலையத்தை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு,V. பாஸ்கரன் அவர்கள் இன்று 15.08.21 திறந்து வைத்தார்கள்.இப்புறக்காவல் நிலையத்தில் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அப்பகுதி மக்கள் ஏதாவது புகார் இருந்தால் புறக்காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்விழாவில் திருமங்கலம் உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் உடனிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.