Police Department News

மதுரை, திருப்பாலை பகுதியில் முதியவர் விஷம் அருந்தி தற்கொலை, திருப்பாலை போலீசார் விசாரணை

மதுரை, திருப்பாலை பகுதியில் முதியவர் விஷம் அருந்தி தற்கொலை, திருப்பாலை போலீசார் விசாரணை

மதுரை, திருப்பாலை, மாடகோன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் ஶ்ரீராம்பெருமாள் வயது 31/21, இவர் சுயமாக பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தந்தை பூமிநாதன் அவர்கள் இவரது பராமரிப்பில் இருந்து கொண்டு நாராயணபுரத்திலுள்ள SEV மேல்நிலை பள்ளியில் வாட்ச் மேனாக வேலை பாரத்து வந்தார். இவர் தனது மைத்துனரின் திருமண அழைப்பிதழில் தனது தந்தையின் பெயர் தவறாக அச்சிடப்பட்டதை பார்த்த நாள் முதல் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இது குறித்து தனது தாயார் தவமணி அவர்களிடமும் விவாதம் செய்துள்ளார் இந்த நிலையில் கடந்த 21 ம் தேதி காலை 8 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்தவர் யாரிடமும் பேசாமல் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியில் சென்று வந்தவர் சுமார் 11 மணியளவில் வீட்டில் வந்து படுத்து விட்டார் இதற்கிடையில் சாப்பிடுவதற்காக அவரை சென்று பார்த்த போது அவரது வாயில் நுரை தள்ளியவாறு படுத்திருந்தார் அவர் விஷம் அருந்தியதாக தெரிய வரவே உடனே முதலுதவியாக புளியை கரைத்து அவர் வாயில் ஊற்றி அதன்பின் அவரது நண்பர்களான வினோத், பாலமுருகன் ஆகியோரின் உதவியுடன் அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றனர் அங்கு பணியில் இருந்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர், அதன்பின் தங்களின் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தகவல் கூறிவிட்டு மாலை 4 மணியளவில் தன் தந்தையின் மரணம்பற்றி திருப்பாலை காவல் நிலையத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கருணாநிதி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.