மதுரை புறநகர் பகுதிகளில் பட்டபகலில் வீட்டை உடைத்து திருடியவர்கள், தனிப்படையினரால் கைது
மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளிலும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் வீட்டை உடைத்து பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திருடும் சம்பவம்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பதிவாகி வந்திருந்தது, இது போன்று குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். V. பாஸ்கரன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்விசாரணையில் மேற்கண்ட இடங்களில் பகல் வேலைகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, S.பாரைபட்டியை சேர்ந்த ராஜாகனி வயது 29/21, த/பெ, ராசையா, சுந்தரம் வயது 32/21, த/பெ, மகாலிங்கம், மற்றும் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி வயது 31/21, த/பெ. கருப்பையா, ஆகியோர் என தெரிய வந்தது, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்த மேற்படி இடங்களில் திருடிய பணம் 1,10,000/− நகை 27.600 கிராம், LED TV 4, மொபைல் போண் 3, லேப்டாப் 1, மற்றும் வீட்டு உபயோகப் பொருடகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைபற்றப்பட்ட மொத்த சொத்தின் மதிப்பு சுமார் 6, 80,000/−ஆகும். மேற்படி 3 எதிகளும் கைது செய்து நீதி மன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார், மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
