Police Department News

மதுரை, செல்லூர் பகுதியின் மனைவி மாயம், கணவன் போலீஸில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, செல்லூர் பகுதியின் மனைவி மாயம், கணவன் போலீஸில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாநகர் செல்லூர் D2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லூர், அஹிம்சாபுரம் 4 வது தெருவில் வசித்து வருபவர் சுந்தரம் மகன் ராமசாமி வயது 40/21, இவர் மனைவி முத்துமணி,மற்றும் இரண்டு மகள்கள் அவினாசி வயது 12/21, ராஜேஸ்வரி வயது 10/21 ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்.இவர் லோடு மேன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவியின் பெற்றோர்கள் செல்லூர் போஸ் வீதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி வழக்கம் போல் தான் வேலைக்கு சென்ற போது தனது மனைவி குழந்தைகள் வீட்டிலிருந்தனர். தான் வேலை முடித்து மாலை சுமார் 6 மணிக்கு வீட்டிற்கு வந்த போது தனது மூத்த மகள் அவினாசி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் தனது மனைவி, இளைய மகள் பற்றி கேட்ட போது காலையில் 10.30 மணிக்கு பாட்டி வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார், உடனே தன் மாமியார் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கே தன் இளைய மகள் ராஜேஸ்வரி மட்டும் இருந்தார் மாமியார் விஜயாவிடம் கேட்ட போது ராஜேஸ்வரியை மட்டும் விட்டு விட்டு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறியுள்ளார். இவரது மனைவி ஏற்கனவே இரு முறை இவ்வாறு வீட்டை விட்டு சென்று விட்டு 10 நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார் எனவே இது வரை திரும்ப வராததால் அக்கம் பக்கம், உறவினர்கள் வீடு, அனைத்து இடங்களிலும் தேடி பார்த்து கிடைக்காததால் செல்லூர் D2, காவல் நிலையத்தில் வந்து தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்துள்ளார், புகாரை பெற்றுக் கொண்ட சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி காணாமல் போன நபரைப் பற்றி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.