Police Department News

மதுரை, சுப்பிரமணியபுரம், வீர காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை

மதுரை, சுப்பிரமணியபுரம், வீர காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை

மதுரை, சுப்பிரமணியபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் மதுரை, ஜெய்ஹிந்துபுரம் ஜீவா ரோடு வஉசி தெருவில் குடியிருக்கும் வெள்ளைச்சாமி மகன் பாலசுப்பிரமணியன் வயது 52/21, இவர் வழக்கமாக காலை 5.30 மணிக்கு கோவிலைத் திறந்து மதியம் 12 மணி வரைக்கும், மாலை 5.30 மணிக்கு கோவிலைத் திறந்து இரவு 9.30 மணி வரைக்கும பூஜை புனஸ்காரங்கள் செய்வது வழக்கம், இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 31 ம் தேதி வழக்கம் போல் பூசாரி காலை சுமார் 5.30 மணியளவில் கோவிலை திறந்து பார்த்த போது கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை காணவில்லை, ஈடனே கோவில் நிர்வாகஸ்தர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு ஜெய்ஹிந்துபுர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் விசாரணை நடத்தி உண்டியல் திருடிச்சென்றவனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.