Police Department News

சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை 2 பேர் கைது..!!!

சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை 2 பேர் கைது..!!!

சிவகங்கை அருகே மதகுபட்டியில் வெள்ளிக்கிழமை இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒக்கூர் அண்ணாநகர் ஏ.காலனியைச் சேர்ந்த செல்லத்துறை மகன் சரத்குமார் 29 தின சரி நாளிதழுக்கு முகவராக பணிபுரிந்தவர்.

ஒக்கூரில் உள்ள வார சந்தை சாலையில் காயங்களுடன் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி , சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் முத்துமீனாட்சி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று சரத்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை செய்ததில் ஒக்கூர் அண்ணாநகர் சி.காலனியைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் கேசவன் ( 30 ), ஒக்கூர் அண்ணாநகர் பி.காலனியைச் சேர்ந்த முருகன் மகன் ருத்ரன் ( 20 ) ஆகியோர் சரத் குமாரை வாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது, இதனிடையே மதகுபட்டி போலீஸார் கேசவன், ருத்ரன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து , அவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறியது சரத்குமார் , கேசவன் , ருத்ரன் ஆகிய மூவரும் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது . தகராறில் ஆத்திரமடைந்த கேசவன் , ருத்ரன் ஆகிய இருவரும் சரத்குமாரை கொலை செய்ததாக கூறியுள்ளனர் . ஆனால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றோம், முழு விசாரணைக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.