Police Department News

பொதுமக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, சாலை பாதுகாப்பு, மற்றும் கொரோனோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகிரி காவல் துறையினர்

பொதுமக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, சாலை பாதுகாப்பு, மற்றும் கொரோனோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகிரி காவல் துறையினர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, குழந்தை திருமணம், மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதே போல் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாசராவ் தெருவிலுள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் சாலை பயணங்களின் போது தலைகவசம் சீட்பெல்ட்டு அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் எனவும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனவும் கொரோனா மற்றும் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்ணர்வை ஏற்படுத்தினர். மேலும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களையும் தங்களின் குடும்பத்தின் நலனையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றுஅறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.