Police Recruitment

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- அருப்புக்கோட்டை ஆல்பா வில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.முருகன் அவர்கள் பேருந்தில் தவற பெண்மணியின் மணி பர்சை துரிதமாகமீட்டார்……

அதன் விபரம் பின்வருமாறு……
வயது 55 மணிமேகலை கணவர் பெயர் பாலகிருஷ்ணன் ஓய்வு சார்பு ஆய்வாளர் மதுரை சம்பவத்தன்று திருமதி.மணிமேகலை மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தால்புரம் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதியபேருந்து நிலையத்தில் வந்திறங்கினார் இறங்கியவுடன் பர்சை தேடினார் இல்லை,கையில் வைத்திருந்த பர்சை காணாமல் திகைத்து நின்றார், பின்னர் பணம் தொலைந்த விசயத்தை பேருந்து நிலையத்தில் இருந்த காவல் ஆல்பாவில் பணியில் இருந்த திரு.முருகன் அவர்களிடம் மணிமேகலை விவரத்தை கூறினார்,உடனே தனது இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு அவரையும் ஏற்றிக்கொண்டார் தான் வந்த பேருந்து எங்கே எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக சென்றபோது அந்த பேருந்து அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நின்ற போது பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் 70,000/- அடங்கிய ATM அட்டையும் கூடவே ரூ1000/-ரொக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது, பின்னர் உரியவரான திருமதி மணிமேகலையிடம் ஒப்படைக்கப்பட்டது . சில நிமிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வானது பாராட்டத்தக்கது என்று பலரும் தெரிவித்தனர்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன் MA,Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.