Police Department News

உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலம்.

உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலம்.

இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதயவியல் துறை சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த ஊர்வலம் பழைய அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவாயிலில் துவங்கி திருவள்ளுவர் சிலை வழியாக அரசு மருத்துவக்கல்லூரியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தின் முக்கிய நோக்கம் இதயத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே. இந்த ஊர்வலத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தலைவர் திரு.ரத்தினவேல், இதயவியல் துறை தலைவர் பேராசிரியர் திரு. பாலசுப்பிரமணி மற்றும் மருத்துவர் செல்வராணி RMO திரு.ரவீந்திரன், திருமதி.ஸ்ரீலதா ARMO திருமதி.முருக பொற்செல்வி மற்றும் திருமதி. விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.