Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 3 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 3 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

கடந்த 04.09.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட முள்ளக்காடு சாமிநகரைச் சேர்ந்த மயில்ராஜ் மகன் இசக்கிமணி வயது(35) இசக்கிமணி மனைவி இசக்கியம்மாள் வயது(35) ஆகிய இருவரையும் தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சவேரியார் பாக்கியம் மகன் ஜேசு வயது(37) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கியதில் இசக்கிமணி இறந்துள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேசு என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி ஜேசு என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயசீலன் அவர்களும்,

கடந்த 15.09.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விளாத்திகுளம் சன்னதி தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (வயது 45) என்பவர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் ஜெயராஜை கைது செய்தனர்.

கடந்த 07.09.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விளாத்திகுளம் குரலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முத்துசாமி வயது (60) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் சகோதரர் உமையனன் என்பவரது மகன் கணேசமூர்த்தி வயது (41) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்தனர்.

மேற்படி விளாத்திகுளம் காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்ட எதிரி ஜெயராஜ் என்பவர் மீதும் கணேசமூர்த்தி என்பவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சவேரியார் பாக்கியம் மகன் 1) ஜேசு , விளாத்திகுளம் சன்னதி தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் 2) ஜெயராஜ் மற்றும் விளாத்திகுளம் குரலையம்பட்டியைச் சேர்ந்த உமையனன் என்பவரது மகன் 3) கணேசமூர்த்தி ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.