![](http://policeenews.com/wp-content/uploads/2021/10/Images-2084202790.jpg)
வண்டியை பார்த்து ஓட்ட சொன்ன ஆட்டோ டிரைவரை தாக்கிய இருசக்கர ஓட்டுனர் விளக்குதூண் B1, போலீசார் விசாரணை
மதுரை, எல்லீஸ் நகர், சூரியா அப்பார்ட்மனட்டில் குடியிந்து வருபவர் அழகர் மகன் மணிகண்டன் வயது 46/21, இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 1 ம் தேதி லேடி டோக் காலேஜ் சவாரி செல்வதற்காக தெற்கு மாசி வீதியிலிருந்து கீழ ஆவணி மூல வீதி இப்ராஹிம் ஸ்டோர் முன்பாக பகல் சுமார் 12.45 மணியளவில் போய் கொண்டிருக்கும் போது அவருக்கு வலது பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னக்கடை வீதியை சேர்ந்த பிரபு என்பவர் வண்டியை உரசுவது போல வந்துள்ளார் ஏன் வண்டியை இப்படி ஓட்டுகிறாய் என கேட்டதற்கு அவர் அசிங்கமாக திட்டியதோடு மட்டுமல்லாது கையில் வைத்திருந்த சாவியால் முகத்தில் குத்தியுள்ளார் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரபு தாக்கியதால் ரத்தக்காயம் அடைந்த மணிகண்டனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை பெற்றார் தகவல் அறிந்த விளக்குத் தூண் B1, காவல் நிலைய போலீசார் மருத்துவ மனை சென்று விசாரித்து சார்பு ஆய்வாளர் திரு. ரமேஸ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
![](http://policeenews.com/wp-content/uploads/2021/10/Screenshot_20210924-174742_Photo-Par-Tamil-Likhe--1022x1024.jpg)