Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 1, கருங்குளம் 3, ஸ்ரீவைகுண்டம் 6, திருச்செந்தூர் 4, உடன்குடி 1, சாத்தான்குளம் 1, கயத்தாறு 1, ஓட்டப்பிடாரம் 12, விளாத்திகுளம் 4 மற்றும் புதூர் 5 ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச் சாவடிகளில் இன்று (9.10.21) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 42 வாக்குசாவடி மையங்களில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை காண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகளை எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.