Police Department News

மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார்

மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார்

மதுரை, தல்லாகுளம் D1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தல்லாகுளம் வடக்கு தெருவில் குடியிருந்து வருபவர் விஸ்வநாதன் மகன் மணிகண்டன் வயது 49/2021, இவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே பஸ் ஸ்டான்டில் மகேஷ் டீ ஸ்டால் என்ற பெயரில் டீ கடை நடத்தி வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி இரவு வழக்கம் போல் கடை வியாபாரம் முடித்து இரவு சுமார் 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார், மறுநாள் காலையில் 10.10.21 ம் தேதி வழக்கம் போல் காலை 7 மணிக்கு கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த் போது 1300 ரூபாய் மதிப்புள்ள சிகரட் பாக்கட்டுகள் மற்றும் பணம் 1620/− ம் களவு போய் இருந்தது தெரியவந்தது, உடனே D1, காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.M.மாணிக்கம் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், விசாரணையில் கடையில் திருடிய நபர் கரும்பாலை, சத்தியவானி முத்து நகரை சேர்ந்த செல்வம் மகன் அழகுபாண்டி வயது 24/2021,என தெரிய வந்தது உடனே அவனை கைது செய்து அழைத்து வந்து விசாரணை செய்து நீதி மன்றக்காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.