Police Department News

திரூநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த, பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

திரூநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த, பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் 33 என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா(47) என்பவரும் தூரத்து உறவினர்கள் ஆவர். இதனால் பேச்சியம்மாளும் சுப்பையாவும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின் சுப்பையாவின் நடவடிக்கை சரியில்லாததால் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா பேச்சியம்மாள் அவரது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும் போது, அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பேச்சியம்மாள் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு பேச்சியம்மாளை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்ற சுப்பையாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.