Police Department News

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் திரு.கணநாதன்.

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் திரு.கணநாதன்.

கடந்த சில நாட்களுக்கு முன் கணநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் கணநாதன் குடும்பத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்ட 1999 பேட்ஜ் போலீசார் சார்பில் ரூ 14,22,250/- நிதி திரட்டப்பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.மனோகர் அவர்கள் கலந்துகொண்டு மறைந்த தெய்வத்திரு.கணநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் 1999 ம் ஆண்டு பேட்ஜில் பணியில் திரு.கணநாதன் அவர்களுடன் சக காவலர்கள் சார்பில் கணநாதன் குடும்பத்தினரிடம் குடும்ப நல நிதியை வழங்கினார்.

மேலும் திரு. கணநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் அவர்கள் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ், நகர் காவல் ஆய்வாளர் திருபாலமுருகன், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுடலைமணி மற்றும் 1999 பேட்ஜ் போலீசார், நகர் காவல் நிலைய போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.