Police Department News

மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு விபத்து மற்றும் நெரிசலை தடுக்க நடவடிக்கை

மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு விபத்து மற்றும் நெரிசலை தடுக்க நடவடிக்கை

மதுரை மாநகரில் 10 போக்குவரத்து காவல் நிலையங்களும் ஒரு போக்குவரத்து திட்டப்பிரிவும் உள்ளன.

மதிச்சியம், தல்லாகுளம் போக்குவரத்து காவல் நிலையங்கள் தவிர மற்ற காவல் நிலையங்கள் வைகையாற்றின் தென் பகுதியில் உள்ளன. இதனால் தல்லாகுளம் மதிச்சியம் போக்குவரத்து காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் விரிவாக்கப்பகுதிகளையும் கவனிப்பதால் சிறமத்திற்குள்ளாகி உள்ளனார்

இதை தவிற்க தற்காலிகாமாக வைகை வட பகுதியில் கூடுதலாக இரண்டு ஆய்வாளர்களுக்கு எல்லைகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன அதன்படி போக்குவரத்து திட்ட பிரிவு ஆய்வாளர் மதிச்சியம் அண்ணாநகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளை கவனிப்பார். உயர் நீதி மன்ற கிளை பாதுகாப்பு ஆய்வாளர் மாட்டுத்தாவணி நிலையத்திற்குட்பட்ட பகுதிகளை கவனிப்பார் தல்லாகுளம் நிலைய ஆய்வாளர் புதூர் தல்லாகுளம் செல்லூர் கூடல்புதூர் திருப்பாலை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளை கவனிப்பார்

உயர் நீதி மன்ற கிளை பாதுகாப்பு ஆய்வாளர் பால்தாய் அவர்கள் ஆயுதப்படைக்கும் அவருக்கு பதில் அங்கிருந்த பஞ்சவர்ணமும் இடமாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.