Police Department News

மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

மதுரை விரகனூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26 ) இவர் தனது டூவீலரில் தனது நண்பரான விஷ்ணுவுடன் மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் தனது நண்பரான அத்வைத் என்பவருடன் வந்த அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்டாலின் பால் (23) என்பவர் ஆனந்துராஜின் டூவீலரில் மோதினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்தராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த விஷ்ணு மதுரை அரசு மருத்துவமனையிலும் ஸ்டாலின் பால் மற்றும் அத்வைத் ஆகியோர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து ஸ்டாலின் பாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.