Police Department News

மதுரை அண்ணாநகரில் கீழே கிடந்த பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு காவல் துறையினரின் பாராட்டு

மதுரை அண்ணாநகரில் கீழே கிடந்த பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு காவல் துறையினரின் பாராட்டு

நேற்று 01/02/2022 அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான அருண் பேக்கரி அருகில் கேட்பாரற்று கிடந்த ஒரு மணி பர்ஸை வண்டியூர் பகுதியை சேர்ந்த திருமதி மீனா என்பவர் எடுத்து தான் வீட்டு வேலை பார்க்கும் டாக்டர் நித்தியா அவர்களிடம் கொடுத்து விட்டு மேற்படி விபரத்தை திருமதி டாக்டர் நித்தியா அவர்கள் B4 கீரைத்துறை சாட்டம் ஒழுங்கு காவல் நிலையமுதல் நிலை காவலர் 3803, திரு. A. கார்த்திக் என்பவரிடம் கொடுத்துள்ளார் அவர் இது சம்பந்தமாக உடனடியாக காவல் உதவி ஆணையர் தெற்கு வாசல் சரகம் மதுரை மாநகர் திரு சண்முகம் அவர்களிடம் விபரத்தை தெரிவித்து மணி பர்ஸிற்கு சொந்தக்காரரான திரு அர்ஜூன் வயது 53/22, s/o புஷ்பகனி மவுளானா சாகிப் தெரு.அண்ணாநகர் மதுரை என்பவரை வரவழைத்து அவரிடம் மேற்படி மணி பர்ஸிலிருந்த ஓட்டுனர் உரிமம், பான் கார்டு ஆதார் கார்டு RC புக் ID Card ATM card மேலும் பணம் 10,180/- ம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் மணி பர்ஸை எடுத்து கொடுத்த மீனா டாக்டர் நித்தியா மற்றும் முதல் நிலை காவலர் திரு கார்த்திக் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.