Police Department News

மதுரை மாவட்டம் மேலூர்-தெற்கு தெரு செம்பூர்பகுதியில் தீ விபத்து

மதுரை மாவட்டம்
மேலூர்-தெற்கு தெரு செம்பூர்பகுதியில்
தீ விபத்து


மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு செம்பூரில் வசித்து வரும் பாண்டி இவர் நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் மனைவி, திருமதி ,P.கலைச் செல்வி வீட்டை திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வரும் போது அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது இதனை கண்ட. அக்கம் பக்கத்தினர் போன் மூலம் மேலூர் தீயணைப்பு ‌& மீட்பு நிலையத்தில் புகார் செய்தார் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மாலை17.30மணி அளவில் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் திரு ராமராஜன் அவர்கள் தலைமையில் விரைந்து வந்தனர் அவர்கள் வந்த போது ஊர் மக்கள் தீயை அணைத்து கொண்டிருந்தனர்
கலைசெல்வி அவர்களின் புகாரின்படி மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் வீட்டில் உள்ள பீரோவில் ரூ3000/= மற்றும் வீட்டு பத்திரம், பட்டா மற்றும் துணிகள் தீக்கு இறையாகிவிட்டது தெரிய வந்தது. மேலும் தீப்பிடித்த காரணம் பற்றி மேலூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published.