சென்னை திருமுல்லைவாயலில் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேசன்(31) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்குளித்ததில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் வெங்கடேசன்தீக்குளித்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்கள். மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இதில் பல கவர்ச்சிகரமான திட்டத்தினை தொடங்கி விளம்பரம் செய்தார்கள். மேற்படி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் […]
மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்ட அளவில் தனிப்படை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பெருங்குடி காவல் நிலையம், கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் மேலூர் காவல் நிலையம் ஆகியவற்றில் தாக்கலான வழிப்பறி மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் மண்டேலா நகரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முத்து முருகன் […]
மதுரை மாநகர் பகுதியில் வழிப் பறி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர்கைது மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் திருட்டை கட்டுப்படுத்த மதுரை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் காலையில் மதுரை செல்லூர் பகுதியில் சிலர்பட்டாக்கத்தியுடன்ரகளையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் நேரில்சென்றனர்.அங்கு ரகளையில் ஈடுபட்ட 16 […]