சென்னை திருமுல்லைவாயலில் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேசன்(31) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்குளித்ததில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் வெங்கடேசன்தீக்குளித்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்
மதுரையில் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச உடல் பரிசோதனை மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில்.. காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை மதுரை காவல் ஆணையர்.. திரு.. லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். அந்த சமயம் போக்குவரத்து துணை ஆணையர் குமார்.. கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள்,, ஆய்வாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]
வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்கவர் பலி வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். […]