Police Department News

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி.,பிரியாணி விருந்து

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி.,பிரியாணி விருந்து

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார்.

சென்னை மாமல்லபுராத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்

இதையடுத்து தமிழக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் செஸ் போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தென் மாவட்ட போலீசாருக்கு 3 நாட்கள் விடுப்பு வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பணியில் ஈடுபட்ட போலீசாரை டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்து பேசினார் காவல் கட்டுபாட்டு அறை அமைத்து சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக போலீசாரை அப்போது அவர் பாராட்டினார் பின்னர் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இதனை பார்வையிட்ட டிஜிபி போலீசாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்நிகழ்சியில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஐஜி ராதிகா டிஐஜி சத்தியப்பிரியா எஸ்.பி. சுகுணாசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published.