Police Department News

மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 12 மூடைகள் புகையிலை பொருள்கள் 200 Kg, ஒரு டூவீலர் பறிமுதல் ஒருவர் கைது மற்றொருவர் தலை மறைவுகீழவளவு போலீசார் நடவடிக்கை

மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 12 மூடைகள் புகையிலை பொருள்கள் 200 Kg, ஒரு டூவீலர் பறிமுதல் ஒருவர் கைது மற்றொருவர் தலை மறைவு
கீழவளவு போலீசார் நடவடிக்கை

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் கீழவளவு சார்பாய்வாளர் பாலகிருஷ்ணன் மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார் மேலூர் ஆகியோர்கள் சேர்ந்து நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில்

1) சிவசீமான் வயது 42
கோட்ட நத்தம்பட்டி என்பவர் கைது

மதகுபட்டியை சேர்ந்த
கணேசன் என்பவர் தலைமறைவு

சிவசிமான் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூடை கணேஷ் புகையிலை மூடையை ஏற்றுக் கொண்டு வெள்ளலூர் விளக்கு அருகே வரும்போது போலீசார் வாகன சோதனை செய்யும் போது மேற்படி நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரிய வருகிறது மேலும் விசாரணையில்அவரது வீட்டில் 11 மூடைகள் இருப்பதாக கூறியதின் பேரில் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் சிவகங்கை மாவட்டம் மதுகுபட்டியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கியதாக தெரிய வருகிறது
மேற்படி நபர்கள் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெரிய அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வருகிறது மேலும் இந்த புகையிலை பொருட்கள் சம்பந்தமாக வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா அல்லது வேறு எங்கு அது பெரிய அளவில் பதுக்கி வைத்துள்ளார்கள் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.