
மதுரையில் திருடு போன சரக்கு வாகனம் பல்லடத்தில் சிக்கியது
மதுரையில் திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் போலீசார் பல்லடத்தில் மடக்கி பிடித்து இருவரை கைது செய்தனர் மதுரை சி எம் ஆர் ரோடு சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் வயது 31 இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை காமராஜர் சாலையில் உள்ள பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார் இதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வாகனத்தில் பொருத்தியுள்ள ஜிபிஎஸ் கருவி உதவியுடன் அதன் இருப்பிடத்தை விளக்குதூண் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வழியாக கோயம்புத்தூர் பகுதிக்கு செல்வது தெரிய வந்தது இதை அடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அந்த சரக்கு வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர் இந்த திருட்டில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் ஏழுபட்டியைச் சேர்ந்த மாதவன் எ முருகன் வயது 48 மற்றும் கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 41 ஆகையோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மீது பல்வேறு வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் நிறைவாக செயல்பட்ட விளக்குத்தூண் போலீசாரை போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் அவர்கள் பாராட்டினார்.
