தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கட்சி பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு தமிழகத்தில் அண்மை காலமாக பிறந்தநாள் விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தரவர்கத்தினரும் பிறந்தநாள் விழாக்களை மண்டபத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது உற்சாக பெருக்கத்தில் இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேக் வெட்டுவதற்கு அரிவாள், வாள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். தங்கள் பகுதிகளில் ‘கெத்து’ காட்டுவதற்காக பிறந்தநாள் விழாக்களில் இதுபோன்ற அடாவடி செயல்களில் சிலர் ஈடுபடுவது […]
மனுக்களை நேரடியாக பெற்றும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் . 08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் மற்றும் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசின்னம்பட்டியில் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றனர். மேலும் நிலப் பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகளை புகார் மனுக்களாக தரும்படியும் கூறினார்கள். மேலும் அங்குள்ள […]
மதுரைமாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் ஏற்பாட்டில் ஸௌராஷ்ட்ர கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தீமையின் விழிப்புணர்வு. போதைப் பொருளுக்கு எதிரா கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் […]