தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செல்லையா (48). கால் டாக்ஸி ஓட்டுநராக பிரபலமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, போனையும் எடுக்கவில்லை என்று அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்று காலை திருவான்மியூர் போலீஸார் கால் டாக்ஸி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது காரின் ஜிபிஎஸ் செல்லையா ஓட்டிய […]
மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை மதுரை ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மத்திய அரசின் யோஜனா திட்டத்தில் ரூ. 30 கோடியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன பிப்ரவரி 1 ல் இக்குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடி கதவு உள்ளிட்டவற்றை போதையில் சிலர் […]
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தாக்கலான 4 கணினி திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த எதிரியான செந்தில்குமார், த/பெ. அய்யர், […]