Police Department News

பாலக்கோடு அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது .

பாலக்கோடு அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆன்லைன் வழியாக கூகுள் பே, போன் பே, பேடி எம் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்ளுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பசவராஜ், சண்முகராஜன், செந்தில், சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அனுமந்தபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.
அவர்களை துரத்தி சென்ற போலீசார் பாலக்கோடு அருகே ஆரதஅள்ளி கூட்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பொட்டலம் பிடிபட்டது.
அதனை தொடர்ந்து அவர்களை விசாரித்ததில் காரிமங்கலம் அருகே ஆல முரசுப் பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது.40), வையாலி கொட்டாய் பகுதியை ராமமூர்த்தி வயது.30) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரித்ததில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இங்கே விற்பனை செய்தது தெரிய வந்தது.
குற்றவாளிகளை பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி இது குறித்து வழக்குப்பதிவு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்னர்.

Leave a Reply

Your email address will not be published.