Police Department News

பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா?

பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா?

பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவை சேர்ந்தவர் பேராசிரியர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் வயது 52 இவரது வீட்டில் 56 பவுன் நகைகள் திருடு போனது.

இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 2 பேர் முன் கதவு பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பழைய குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பேராசிரியர் வீட்டில் கொள்ளை அடித்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல உள்ளது என்று தெரிவித்தனர்.

பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடித்த கும்பல், பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இது வட மாநில கும்பலின் கைவரிசைகளில் ஒன்று என்று போலீசார் கருதுகின்றனர். எனவே இந்த கும்பல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.