Police Department News

குழந்தை திருமணம் செய்த கனவன் மீது வழக்குப் பதிவு

குழந்தை திருமணம் செய்த கனவன் மீது வழக்குப் பதிவு

தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே கண்டகபைல் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது.22) என்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி (வயது.16) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர், கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி கண்டகபைல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். தீடீரென சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தை திருமணம் செய்ததை கண்டறிந்த மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் ஊர் நல அலுவலர் சாந்தி மகேந்திரமங்கலம் போலீசில் குழந்தை திருமன தடுப்பு சட்டப்படி முத்து மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துவை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.