Police Department News

காவலர் வீர வணக்கம் நாளன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கட்டுரை போட்டி

காவலர் வீர வணக்கம் நாளன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கட்டுரை போட்டி

காவல்துறையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 ம் நாளன்று வீர மரணமடைந்த காவலர்களுக்கு காவலர் வீர வணக்கம் நாள் அனுஷ்டித்து பரேடு நடை பெற்று வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு இன்று அக்டோபர் 15 மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க பரேடு நடைபெறுவதோடு அங்குள்ள திருமண மண்டபத்தில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டியும் நடைபெற உள்ளது இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் பங்கு பெறலாம் இதில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை mcadctrplan@gmail.com என்ற இ.மெயிலுக்கு அனுப்பவும்

மேலும் விபரங்களுக்கு மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. .தங்கமணி அவர்களை 8300010561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இன்று மதியம் 3 மணிக்கு மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதலாம் காவல் பணிகள் குறித்து ஓவியம் வரைய வேண்டும்

தேவையான எழுது பொருட்கள் அட்டை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.