காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
சென்னை: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. காவலர் வீரவணக்க நாளான இன்று டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் […]
பொய்யான வீடியோக்ள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் கும்பலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு தமிழக டி.ஜி.பி.,அதிர்ச்சி தகவல் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு கோவை எஸ்.பி.,அலுவலகத்தில் கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பரவிய பொய்யான செய்திகள் அவற்றால் ஏற்பட்ட பீதி குழப்பத்தை பக்குவமாக கையாண்டு இயல்பு நிலை திரும்ப உதவிய தொழில் நிறுவனத்தினர்களுக்கு பாராட்டுக்கள். தற்போது ஓரளவிற்கு நிலைமை சரியாகி விட்டது எனினும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது […]
பாலக்கோடு அருகே பெற்றோர் கண்டித்ததால் +1 பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தார அல்லி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி இவர் TNSTC-ல் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் காவியா (17) பாலக்கோடு தனியார் பள்ளியில் பிளஸ் +1 படித்து வருகிறார். இவர் அதிகளவு செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும் இதற்குபெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டிததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]