காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கன்சாவடி அகற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை சுங்கன்சாவடியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதை எடுத்து சுங்கன்சாவடி எதிர்ப்பு குழுவினர் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழில்பேட்டையில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்கள் கருப்புக் கொடியை காட்டி சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கப்பட்டன.இந்த […]
முன்னீர்பள்ளம் அ௫கே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி டாஸ்மாக் கடை அ௫கே தலை துண்டிக்கபட்ட நிலையில் கொலை செய்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது மேற்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை, மேற்கொண்டதில் கொலை செய்பட்டு கிடந்த நபர் கீழ செவல் நயினார் குளத்தைச் சேர்ந்த, கி௫ஷ்ணன் என்பவரது மகன் […]
தென்காசிசங்கரன்கோவிலில் இளம் பெண் மாயம் சங்கரன்கோவில் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). இவரது மகள் முத்துசெல்வி (25). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பரமசிவம் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முத்துசெல்வியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த […]