காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள் மதுரை மாநகர், திடீர் நகர் C1, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மேலமாசி வீதியில் உள்ள மலபார் கோல்ட்டு மற்றும் டயமண்ட் நகைக் கடையில் , இரண்டு பெண்கள் கடந்த 10 ம் தேதி நகை வாங்க வந்தனர் அவர்கள் மோதிரங்கள் உள்ள பிரிவில் மோதிரங்களை பார்வையிட்டு விட்டு அங்கிருந்த 8.195 கிராம் எடையுள்ள மோதிரத்தை எடுத்துக் கொண்டு அதற்கு […]
மதுரை திருமங்கலம் பகுதியில்42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை அருகே திருமங்கலத்தில் 42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கடை உரிமையாளர் யேசுதாசை கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் யேசுதாஸ்(வயது 53). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் மார்க்கெட் பகுதியில் உள்ள அவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட […]
ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் குருக்கு பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய காவல் ஆய்வாளர் மாணவர்கள் பேருந்து படியில் நிற்க கூடாது […]