காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 188 வது பிரிவு ஒரு பொது ஊழியர் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பது குற்றம் என்பது குறித்து தெளிவாக விளக்கம் பொது ஊழியர்கள் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பதும் குற்றமாகும் . ஒருவரை , ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் அவர் அந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது . அதேபோல் நம் வசம் உள்ள ஒரு சொத்தைப்பற்றி ஓர் உத்தரவு போடப்பட்டால் , அந்த […]
சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வந்தவரை அவரது பெற்றோரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த ஒரு சிறுமி மற்றும் வாலிபரை அழைத்து விசாரிக்க அந்த வாலிபர் வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நந்தகுமார் என்றும் தெரியவந்தது மேலும் அந்த சிறுமி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது அவர்கள் இருவரும் […]
மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சின்னமுனியன் (வயது .70)கோவிலுக்கு சொந்தமான 40 ஆண்டு பழமை வாய்ந்த கரகம் திடிரென காணாமல் போனதால் கோவில் பூசாரியின் மீது கோவில் தர்மகர்த்தா சுதர்சனன் மகேந்திரமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார், போலீசார் நடத்திய விசாரனையில் பூசாரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவி (வயது.30) […]